ஆபத்தான முறையில் பயணம்

Update: 2023-01-25 18:07 GMT
மூலக்காடு-சங்கராபுரம் செல்லும் அரசு பஸ்சில் மாணவர்கள் படியில் தொங்கிய படி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். மேலும் புதூர் வழியாக செல்லும் சில அரசு பஸ்கள் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதாக பொதுமக்கள் மத்தியில் புகார்கள் எழுகிறது. எனவே மூலக்காடு-சங்கராபுரம் செல்லும் அரசு பஸ்கள் புதூரில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்கள் இதுபோன்று ஆபத்தான முறையில் பஸ்களில் பயணம் செய்வதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி