பள்ளி மாணவர்கள் அவதி

Update: 2023-01-25 14:36 GMT

புதுக்கோட்டை மாவட்டம், காரக்கோட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் முறையாக போக்குவரத்து வசதி இல்லாததால் பள்ளத்தில் கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள் நடந்தே பள்ளிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மணமேல்குடியிலிருந்து காரக்கோட்டை வழியாக பள்ளி துவங்கும், முடியும் நேரங்களில் நகர பஸ் அல்லது மினி பஸ் போக்குவரத்து வசதி ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி