போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-01-25 12:49 GMT
நாமக்கல் நகரில் ஆங்காங்கே சாலையோரம் இருசக்கர வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வங்கிகள் முன்பு அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மோகனூர் சாலை, பரமத்திசாலை, சேந்தமங்கலம் சாலை மற்றும் பிரதான சாலையில் இந்த பிரச்சினை அதிக அளவில் இருந்து வருகிறது. எனவே சாலையோரம் இருசக்கர வாகனங்களை முறையாக நிறுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி