பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்

Update: 2023-01-25 12:38 GMT

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும் பெண்களிடம் மத்திய பஸ் நிலையத்தில் குடிபோதையில் சுற்றித்திரியும் போதை ஆசாமிகள்  தகராறு செய்வதுடன், தவறாக நடக்க முயற்சிக்கின்றனர். எனவே இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி