அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?

Update: 2023-01-18 15:01 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், மெய்யக்கவுண்டன்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளாக குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி