பாதை மாறும் பஸ்கள்

Update: 2023-01-18 10:21 GMT


ஈரோட்டில் இருந்து கரூர், திருச்சி செல்லும் பஸ்கள் கருமாண்டம்பாளையத்தில் இருந்து கீழ்ரோடு, மேல்ரோடு என 2 பாதைகள் வழியாக செல்கின்றன. இதில் காரணாம்பாளையத்திலும், வெங்கம்பூரிலும் ரெயில்வே கேட் இருப்பதால் கீழ்ரோட்டில் செல்லவேண்டிய சில அரசு பஸ்களும் மேல்ரோடு வழியாக அதாவது நடுப்பாளையம், தாமரைப்பாளையம் வழியாக சென்றுவிடுகின்றன. இதனால் கொளாநல்லி, கருங்கரடு, ஊஞ்சலூர், காசிபாளையம், வெங்கம்பூர் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்கள் பாதை மாறாமல் உரிய பாதையில் செல்கிறதா? என்பதை கண்காணிக்கவேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி