நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2023-01-11 13:25 GMT

அரியலூர் சாவடிக்காட்டில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பஸ் ஏறி செல்ல வேண்டும் என்றால் சாவடிகாட்டிற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பெரிது அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தனியார் பள்ளி அருகே பஸ்கள் நின்று செல்லும் வகையில், நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்