போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்

Update: 2023-01-08 14:14 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கடைத்தெரு பகுதி மற்றும் நகர பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்