உயிர்பலி வாங்க காத்திருக்கும் நிழற்குடை

Update: 2023-01-08 13:40 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பழைய ஆதனக்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நிழற்குடையில் அமர்ந்துதான் பஸ் ஏறி செல்கின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் இந்த நிழற்குடையில் அமர்ந்து இருக்கும்போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட்ட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி