போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் லாரி

Update: 2023-01-04 15:30 GMT

பெங்களூரு ஆர்.டி.நகர் எச்.எம்.டி. லே-அவுட்டில் கடந்த ஒரு வாரமாக போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு லாரி நின்று கொண்டு இருக்கிறது. இதனால் வாகன போக்குவரத்து பரபரப்பாக இருக்கும் நேரத்தில் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர்.

இரவில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் அந்த லாரி மீது மோதினால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் லாரியை அங்கிருந்து அகற்ற போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்