நிறுத்தப்பட்ட பஸ்கள்

Update: 2023-01-04 13:53 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் வழித்தடத்தில் அரசு பஸ்களை விட தனியார் பஸ்களே அதிகம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா காலத்திற்கு பின்னர் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் இரவு நேரங்களில் இயக்கப்படுவது இல்லை. இதனால் வேலைக்கு செல்லும் அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள், வெளியூர் பயணம் செய்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அனுமதி பெற்றுள்ள நேரத்தில் குறிப்பிட்ட வழித்தடங்களில் தனியார் பஸ்கள் இயக்கப்படுவதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி