நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2023-01-04 07:50 GMT

தெள்ளாந்தி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டித்தோப்பில் மண்ணடிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மாமூடு பகுதியில் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் வழியக விவசாயிகள், பள்ளி மாணவ-மாணவிகள் வாகன ஓட்டிகள் மண்ணடிக்கு சென்று வருகின்றனர். தற்போது இந்த தரைப்பாலம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் விவசாயிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்த பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலத்தை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி