பொதுமக்களுக்கு இடையூறு

Update: 2023-01-01 16:21 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 100-கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் மது குடிக்கிறார்கள். மேலும் இரவில் மதுபோதையில் அட்டகாசம் செய்வதுடன், பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பயணிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்தன், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி