போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2023-01-01 14:39 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனை அறியாமல் வரும் வாகன ஓட்டிகள் அவற்றின் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக இரவு நேரங்களில் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி