பஸ் வசதி வேண்டும்

Update: 2023-01-01 14:38 GMT

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உப்பூர் புது ரோடு பஸ் நிறுத்தத்தில் பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி செல்வதற்காக அரசு மற்றும் தனியார் பஸ்கள் கிடைப்பதில்லை. குறிப்பாக மேற்கண்ட வழித்தடத்துக்கு செல்லும் பஸ்கள் உப்பூர் புதுரோடு பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி செல்வதற்காக பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்

பஸ் வசதி