போக்குவரத்து நெரிசல்

Update: 2022-12-28 18:19 GMT
புவனகிரி தாலுகா மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடதலைகுளம் கிராமத்தில் உள்ள சாலையை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகளுக்கு சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. இதுகுறித்து அதகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி