பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-28 16:23 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தர்மபுரி-பொம்மிடி செல்லும் சாலையில் கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழை காலங்களில் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை சீரமைப்பார்களா?

-மாது, மோளையானூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி