போக்குவரத்து நெரிசல்

Update: 2022-12-28 16:19 GMT

ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கரையில் ஓம்சக்தி கோவில் அருகில் வளைவாக உள்ள பாலத்தின் மீது கார்களை நீண்ட வரிசையில் நிறுத்திவிடுகிறார்கள். இதனால் அந்த வளைவில் கனரக வாகனங்கள் வரும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக கார்கள் நிறுத்தப்படுவதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

-ரவிச்சந்திரன், ஓசூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி