சாலையில் சுற்றிதிரியும் நாய்கள்-கால்நடைகள்

Update: 2022-12-25 13:16 GMT

நாகை காந்தி சிலை அபிராமி அம்மன் கோவில் அருகில் மாலை நேரத்தில் நாய்கள், மாடுகள் சாலையில் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதில் நாய்கள் சாலையில் செல்லும் மாணவ-மாணவிகள், சிறுவர், சிறுமிகளை விரட்டி சென்று கடிக்கின்றன. மேலும், அந்த பகுதியில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளை வேட்டையாடுகின்றன. இதேபோல் கால்நடைகள் சாலையின் குறுக்கே படுத்துக்கொள்வதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள், கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

-சித்திக், நாகை.

மேலும் செய்திகள்

பஸ் வசதி