பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?

Update: 2022-12-21 14:44 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகில் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த வடிகால் வாய்க்காலில் தடுப்புசுவர் சேதமடைந்து இல்லாத நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி