தொடரும் விபத்துக்கள்

Update: 2022-12-21 14:00 GMT

திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வி.கைகாட்டி ஜி.கே.எம். நகர் அருகே சாலையோரத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வரும் மது பிரியர்கள் சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும் மது போதையில் செல்பவர்கள் விபத்துகளை ஏற்படுத்துவதுடன் அவர்களும் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதனை தடுக்கும் வகையில் இந்த சாலையில் வேகத்தடையோ அல்லது சாலையின் குறுக்கே பேரிக்காடுகளோ அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி