விபத்தில் சிக்கும் வாகனங்கள்

Update: 2022-12-21 12:34 GMT

கோவை சங்கனூர் பாலம் பகுதியில் வீரசத்தி அம்மன் கோவில் அருகே சிலர் லாரிகள் உள்பட கனரக வாகனங்களை இரவும், பகலுமாக நிறுத்தி வைக்கின்றனர். ஏற்கனவே அங்குள்ள சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்யும்போது, அந்த குழிகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. மறுபுறம், கனரக வாகனங்களை நிறுத்துவதால், அந்த வழியாக செல்லும் பிற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி