பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-21 11:17 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் நைனா குலத்தெரு செல்லும் பாதை உள்ளது. இந்த பாதையில் உள்ள பாலம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பாலத்தின் குறுக்கே செல்லும் வாய்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் குளம் போல் தேங்கி கிடப்பதால்,தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைப்பதோடு, வாய்க்காலை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி