பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-18 12:47 GMT

நாகை மாவட்டம் ஆதலையூர் ஊராட்சியில் ஆதலையூர் ஆலமரத்தடி பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த பாலத்தில் தடுப்பு சுவர் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் பாலத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்