கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-12-18 11:51 GMT


பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் இந்தப்பகுதிக்கு குறைவான பஸ்களே இயக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்லும் நிலை நிலவி வருகிறது. அதனால் கோவையில் இருந்து பெரியநாயக்கன்பாளையத்தில் கூடுதல் பஸ்கள் மற்றும் டவுன் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி