போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2022-12-18 11:14 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கடைவீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனை அறியாமல் வரும் வாகன ஓட்டிகள் கால்நடைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்