பயணிகள் நிழலகம் வேண்டும்

Update: 2022-12-18 11:10 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம் பகுதியில் புனவாசல் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து கூத்தாநல்லூர், மன்னார்குடிக்கு ஏராளமான பொதுமக்கள் பஸ்சில் சென்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள். இவர்கள் நிழலகம் இல்லாமல் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ-மாணவிகள் நலன் கருதி மேற்கண்ட பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்