விதிமீறல்கள் தடுக்கப்படுமா?

Update: 2022-12-18 11:08 GMT

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹார்ன்களை(காற்று ஒலிப்பானை) பயன்படுத்துகின்றனர். இதில் இருந்து வெளிப்படும் இரைச்சலால் மற்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், பஸ்களும் அதிவேகமாக இயக்கப்படுவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இத்தகைய போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி