அதிக சத்தம் ஆபத்து

Update: 2022-12-11 17:17 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிகளில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் வாகனங்களில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது. மேலும் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் பகுதிகளில் அதிகமான தனியார் பஸ்கள், கார், பள்ளி, கல்லூரி வாகனங்கள், சரக்கு வாகனம், இருசக்கர வாகனங்களில் மிக அதிக அளவு ஒலியெழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம், தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி