பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-12-11 17:02 GMT

கிருஷ்ணகிரியில் இருந்து எலத்தகிரி, கந்திகுப்பம் வழியாக பர்கூர் வந்து இங்கிருந்து ஜெகதேவி, அண்ணாசிலை, அத்திக்கானூர் வழியாக போச்சம்பள்ளி வரை அரசு டவுன் பஸ் இயங்கி வந்தது. அந்த டவுன் பஸ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்த பஸ்களில் சென்று வந்த பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மீண்டும் டவுன் பஸ்சை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கிருஷ்ணா, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி