போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2022-12-11 13:37 GMT

கோவை கணபதி காவலர் குடியிருப்பு பகுதியில் இருந்து காந்திமாநகர் செல்லும் வழியில் சாலையோரங்களில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதனால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும், பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்