ஆபத்தான நிழற்குடை

Update: 2022-12-11 12:53 GMT

புதுக்கோட்டை மாவட்டம், குண்ணன்டார்கோவில் ஒன்றியம், புலியூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லதங்காள்பட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல வசதியாக கீரனூர்- கிள்ளுக்கோட்டை சாலையில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் இந்த நிழற்குடையில் நிற்கும்போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி