வேகமாக செல்லும் பஸ்களால் விபத்து

Update: 2022-12-07 16:52 GMT
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் சத்திரத்திற்கு ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் சத்திரத்தில் இருந்து புறப்பட்டு மத்திய பஸ் நிலையம் வரும்போதும், பின்னர் இங்கிருந்து செல்லும்போது அதிவேகமாக செல்கிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் பல தனியார் பஸ்களின் டிரைவர்கள் பயணிகளை குறிப்பிட்ட நிழற்குடையில் நிறுத்தி ஏற்றாமல் சாலையின் நடுவழியில் ஆட்களை ஏற்றி வருகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி