போக்குவரத்து நெரிசல்

Update: 2022-12-07 16:40 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களாக அனுமதி இல்லாமல் சரக்கு லாரிகள் நிற்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன. இரு சக்கர வாகனங்களில் வரும் பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பஸ்கள் தவிர பிற வாகனங்கள் அந்த இடத்தில் நிறுத்துபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நாராயணசாமி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி