ரோடு சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-07 05:38 GMT


ஈரோட்டை அடுத்த வெண்டிபாளையம் அருகே மணலி கந்தசாமி வீதியில் உள்ள ரோடு ஈரோடு-நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய ரோடாக உள்ளது. இது தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டு்ம், குழியுமாக காணப்படுகிறது. மேலும் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு் வருகின்றனர். உடனே வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவுப் பாலத்தில் இருந்து மணலி கந்தசாமி குடியிருப்பு வரை உள்ள பிரதான சாலையை புதுப்பித்து தார் சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்