போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2022-12-04 13:49 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதன்காரணமாக அந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக வேலைக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி