சேதமடைந்த பயணிகள் நிழலகங்கள்

Update: 2022-12-04 13:48 GMT

திருவாரூர்-மன்னார்குடி வழித்தடத்தில் கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி சாலை உள்ளது. இந்த வழித்தடத்தில் எராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பஸ்சில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கோரையாறு, பூதமங்கலம் பஸ் நிறுத்தம், பனங்காட்டாங்குடி, கீழபனங்காட்டாங்கடி பயணிகள் நிழலங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் உள்ள பயணிகள் நிழலகங்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்

பஸ்வசதி