கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-11-30 16:44 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசுதொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இல்லை. இதனால் மாணவர்கள் பஸ் படிகளில் ஆபத்தை உணராமல் தொங்கிக்கொண்டு செல்கின்றனர். எனவே மாணவர்களின் நலன்கருதி கூடுதல் பஸ்களை இயக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரவி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்