கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-11-30 16:40 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த பேளாரஅள்ளி கிராமத்திலும் அதனை சுற்றியும் 10-கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்வோர் பஸ்களில் சென்று வந்தனர். ஆனால் சில மாதங்களாக இந்த கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனியம்மாள், பேளாரஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ்வசதி