நிழற்குடை வேண்டும்

Update: 2022-11-27 12:00 GMT

பெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் ஒதியம், அசூர் பிரிவு சாலையில் பல கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பலதரப்பட்ட வியாபார மக்கள் இறங்கி உள் கிராமங்களுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு என இங்கு பயணிகள் நிழற்குடை இல்லாததால் அவர்கள் நீண்ட நேரம் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வெயில், மழையில் நின்று பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி