விரைவு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

Update: 2022-11-27 10:35 GMT

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து தூத்துக்குடிக்கு மதுரை வழியாக இரவு நேரத்தில் அரசு விரைவு பஸ் தினமும் இயக்கப்பட்டு வந்தது. அந்த விரைவு பஸ் தற்போது மதுரை வழியாக செல்லாமல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்கிறது. இதனால் மதுரைக்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேளாங்கண்ணியில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு  இரவு நேர அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி