தள்ளுவண்டிகளால் விபத்து

Update: 2022-11-23 17:02 GMT

கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் அருகே சாலை இருபுறங்களும் தள்ளு வண்டிகளை நிறுத்தி விற்பனை செய்கின்றனர். இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் இவ்வாறு சாலையில் நிறுத்துவதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயண ராஜா, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்