பாலத்திற்கு தடுப்பு சுவர் வேண்டும்

Update: 2022-11-23 12:40 GMT

நாகை மாவட்டம் திருமருகல் வடக்கு ஒன்றியம் போலகம் ஊராட்சி நடுத்தெருவில் உள்ள சாலையின் வழியாக தினமும் ஏராளமானோர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலையின் குறுக்கே உள்ள வாய்க்காலில் ராட்சத குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த வாய்க்கால் தூர்ந்து போய் தண்ணீர் செல்ல வழியின்றி காணப்படுகிறது. மேலும் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர்வாரி, பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைத்து தரவேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி