பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2022-11-23 09:03 GMT

கோவைப்புதூர்-காந்திபுரம் வழித்தடத்தில் குனியமுத்தூர், பேரூர் மார்க்கத்தில் 160 சி என்ற அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பஸ்கள் கொரோனா காலத்தில் இருந்து நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அந்த பஸ்களை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் 2 பஸ்களில் மாறி மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதேபோன்று கோவைப்புதூர்-துடியலூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட 4 ஜே எண் கொண்ட ஒரு பஸ்சும் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்