கூடுதல் பஸ்கள் வேண்டும்

Update: 2022-11-20 13:03 GMT

கோவைப்புதூர்-காந்திபுரம் வழித்தடத்தில் 30-ம் எண் கொண்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் மாலை நேரம் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. குறிப்பாக மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது. பள்ளி, கல்லூரி முடிந்து வரும் மாணவ-மாணவிகள், வெளியிடங்களில் வேலை முடிந்து வரும் பணியாளர்கள் வீடு திரும்பும் நேரம் என்பதால், கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து அவதியடைகின்றனர். எனவே அந்த நேரத்துக்கு கூடுதல் பஸ்களை விட வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி