நடைபாதையில் மரக்கிளைகள்

Update: 2022-11-20 13:01 GMT

கோவை பாலசுந்தரம் சாலை போக்குவரத்து துறையின் சிறுவர் பூங்கா அருகே நடைபாதையில் மரக்கிளைகள் வெட்டி போடப்பட்டுள்ளது. அந்த மரக்கிளைகள் வெட்டி 2 நாட்களுக்கு மேல் ஆகியும் அகற்றப்படவில்லை. இதனால் காய்ந்த நிலையில் அங்கேயே கிடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டி இருப்பதால், விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே நடைபாதையில் கிடக்கும் மரக்கிளைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி