பஸ் வசதி இல்லாத சுற்றுலா தலம்

Update: 2022-11-13 12:58 GMT
பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூர் கிராமத்தில் பலகோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் அமைந்துள்ளது. இங்கு பல பகுதிகளில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிடுகிறார்கள். ஆனால் அருகிலுள்ள அரியலூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சரியான பஸ் வசதி இல்லாததால் கிராம மக்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். குறைந்த சுற்றுலா தலங்களை மட்டுமே கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இத்தகைய இடங்களுக்கு அதிகாரிகள் முறையான பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி