பஸ்சின் உள்ளே ஆபத்தான ஓட்டை

Update: 2022-11-13 11:05 GMT

நாகையில் இருந்து சிக்கல், வடுகச்சேரி வழியாக பாலகுறிச்சி செல்லும் பொதுமக்களின் வசதிக்காக அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சின் மூலம் தினமும் ஏராளமான பொதுமக்கள், பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த பஸ்சில் இருக்கையின் அடியில் சேதமடைந்து ஓட்டை ஏற்பட்டு அபாய பள்ளம் போல் காட்சி அளிக்கிறது. பஸ்சின் உள்ளே சேதமடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்சில் உள்ள ஓட்டையை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி