பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்

Update: 2022-11-09 20:35 GMT
கள்ளக்குறிச்சி-தியாகதுருகம் வரை இயக்கப்படும் அரசு பஸ்சில் தியாகதுருகம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் இந்த வழித்தட பஸ்சில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களில் சிலர் ஆபத்தான முறையில் படிக்கட்டில் சாகச பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் பெரும் அசம்பாவிதம் நிகழும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்று மாணவர்கள் பயணம் மேற்கொள்ளாமல் இருக்க கள்ளக்குறிச்சி-தியாகதுருகம் வரை கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்