பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து எளம்பலூர் செல்லும் சாலையில் உள்ள நான்கு ரோடு பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் இப்பகுதியில் பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.